Chapter 2 of 10

எஸ்றா2

1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,

2

செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:

3

பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.

4

செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.

5

ஆராகின் வம்சத்தார் 775 பேர்.

6

யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.

7

ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.

8

சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.

9

சக்காயின் வம்சத்தார் 760 பேர்.

10

பானியின் வம்சத்தார் 642 பேர்.

11

பெபாயின் வம்சத்தார் 623 பேர்.

12

அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.

13

அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.

14

பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.

15

ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.

16

எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.

17

பேசாயின் வம்சத்தார் 323 பேர்.

18

யோராகின் வம்சத்தார் 112 பேர்.

19

ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.

20

கிபாரின் வம்சத்தார் 95 பேர்.

21

பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.

22

நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.

23

ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.

24

அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.

25

கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.

26

ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.

27

மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.

28

பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.

29

நேபோவின் வம்சத்தார் 52 பேர்.

30

மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.

31

மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.

32

ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.

33

லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.

34

எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.

35

செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.

36

ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.

37

இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.

38

பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.

39

ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.

40

லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.

41

பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.

42

வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.

43

நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,

44

கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,

45

லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,

46

ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,

47

கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,

48

ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,

49

ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,

50

அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,

51

பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,

52

பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,

53

பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,

54

நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.

55

சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,

56

யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,

57

செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.

58

நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.

59

தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:

60

தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.

61

ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.

62

இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

63

ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

64

சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.

65

அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

66

அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,

67

அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,

68

வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

69

அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.

70

ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

எஸ்றா 2 (tam_irv) — EdenLecta